Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபாயில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

31 July 2010

சோனாப்புர் பலுதியா கேம்ப் - ல் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், துபை கிளையான சோனாப்புர் பலுதியா கேம்ப்பில்  வைத்து 30.07.2010 வெள்ளிக்கிழமை  மஃரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது.   இதில்  சகோ. மசூது அவர்கள்  மறுமை சிந்தனை ன்ற தலைப்பில்  குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில்  சிறப்பாக உரையாற்றினார்கள்.
 

இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

பொங்கியது தீவுத்திடல்!!! புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே...

பழமையும் புதுமையும் இணைந்த சென்னை மாநகரம் கடந்த வாரத்தின் முதல் ஞாயிறு ஜூலை 4ல் களை கட்டியது என்றே சொல்ல வேண்டும்.இதற்குக் காரணம் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு சமுதாயத்தவர் இங்குள்ள தீவுத்திடலிலும் மற்றும் அதன்சுற்றுப் புறங்களிலும் திரண்டதுதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கடந்த சில மாதங்களாக ஒட்டு மொத்த முஸ்லிம்சமுதாயமும் ஆவலோடு ஆர்வத்தோடும் எதிர்பார்த்திருந்தஒடுக்கப்பட்டோரின்  உரிமை பேரணி மற்றும் மாநாடு கடந்த 04-07-10 ஞாயிறு அன்று  வெகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

காரணங்களும் களப்பணிகளும்

இந்த மாநாட்டைப் பற்றிய செய்திகளுக்குச் செல்வதற்கு முன்னால் இதற்கான எழுச்சி ஊட்டப்பட காரணமாய் இருந்த நிகழ்ச்சிகள் பற்றியும் திட்டமிடப்பட்ட பசபஓ யினரின் ஆரம்பகட்ட பணிகள் பற்றியும் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.

28 July 2010

உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி

பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படுகின்றது.

ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான்.  இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது.  இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.

இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது.  இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.

26 July 2010

துபாய் - தேய்ரா தலைமை மர்கசில் நடைபெற்ற மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - துபை தலைமை மர்கசில் 23-07-2010 வெள்ளிக்கிழமை காலை ஜீரண மண்டலம் - ஓர் பார்வை என்ற தலைப்பில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

சரியாக காலை 10.00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் நாஸர்  தலைமை வகித்தார். மருத்துவ அணி செயலாளர் சாதிக் அலி ஜீரண மண்டலம் பற்றிய விளக்கத்தை மருத்துவ ஆதாரங்களுடன் விளக்கினார். செரிமான பாதை உறுப்புக்களில் உண்டாகும் நோய்கள், அதற்கான அறிகுறிகள், அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் உள்பட வாய் தொடங்கி ஆசன வாய் வரை உள்ள உறுப்புக்களை பவர்பாய்ண்ட் ஸ்லைட் மூலமாக விளக்கப்பட்டது.

உதிரம் கொடுப்போம்!!! உயிரைக் காப்போம்!!!

நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம்.  திறந்து விசாரிக்கும் போது, 'எனது தாயார் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்' என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார்.  உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், 'உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?' என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார்.  இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, உங்கள் இரத்தப் பிரிவு என்ன என்று கேட்கும் போது, 'எனது இரத்தப் பிரிவும் அது தான். எனினும் நான் இதுவரை இரத்தம் கொடுத்ததில்லை. பயமாக இருக்கின்றது' என்று மகன் கூறுகின்றார்.

இது போல், மனைவிக்குப் பிரவச வேதனை, அறுவை சிகிச்சை என்று ஓடோடி வரும் கணவனிடம், நீங்கள் உங்கள் இரத்தத்தைக் கொடுத்து விட்டு, நீங்கள் கேட்கும் இரத்தப் பிரிவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அந்தக் கணவனின் முகத்தில் இறுக்கம் ஏற்பட்டு விடுகின்றது.  அம்முகத்தில் பேயறைந்தாற்போல் ஒரு தோற்றம்!

தாயைக் காக்க தனயன் எப்படி முனைகின்றார்? மனைவியைக் காக்க கணவன் எப்படி முன் வருகின்றார்? என்று பாருங்கள்.  உதாரணத்துக்கு இந்த உறவுகள் சொல்லப்பட்டுள்ளன.  இது போலவே தந்தைக்கு மகனும், தந்தை தன் பிள்ளைகளுக்கும் இரத்தம் கொடுக்க முன்வருவதில்லை.  அண்ணன் தம்பிக்கும் தம்பி அண்ணனுக்கும் கொடுக்க முன்வருவதில்லை.

24 July 2010

துபை ஹோர் அல் அன்ஸ் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், துபை கிளையான ஹோர் அல் அன்ஸ் கிளையில் வைத்து 23.07.2010 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது.   இதில்  சகோ. அப்துஸ் ஸலாம் அவர்கள்  உணரப்படாத தீமைகள் ன்ற தலைப்பில்  குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில்  சிறப்பாக உரையாற்றினார்கள்.

 
இதில் ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

23 July 2010

பராஅத் இரவு - ஓர் உண்மை விளக்கம் !

கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
தமது முகத்தை அல்லாஹ்வுக்கு பணியச் செய்து,நல்லறமும்  செய்பவருக்கு கூலி அவரது இறைவனிடம் உள்ளது.  அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 2: 112)
 
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்..
எனக்கு பின்னால் உருவாக்கப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560

மார்க்கம் என்ற பெயராலும் - நன்மைகள் என்ற பெயராலும் ஏதேதோ காரியங்களையும், வணக்கங்களையும் தம்மனம் போன போக்கில் தீர்மானித்துக் கொண்டு அவற்றை குறிப்பிட்ட சில தினத்தில் - இரவில் செய்வதை சிறந்த அமல்களாக எண்ணி நம் சமுதாய மக்கள் செய்து வருகின்றனர். அந்த செயல்கள்;யாவும் பாதுகாக்கப்பட்ட இறைவேதமாம் அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது மாண்பு நிறைந்த மாநபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படுத்திக் காட்டப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் ஆய்வு செய்யாமல் கடமைகளாக சில காரியங்களை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட காரியங்களில் ஒன்றுதான் ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் கொண்டாடப்படும் ஷபே பராத் (பராஅத் இரவு) ஆகும்.

20 July 2010

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே

''இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே!  உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம்.  ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.

இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.  இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை.  நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை.  கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்!  கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது!  ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.  ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.

18 July 2010

துபை தலைமையில் வாராந்திர பயான்

கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு பீறுநடைப் போட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமையில் நடந்துவரும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடராக கடந்த 16.07.2010 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 10.15 மணி வரை 'அல்லாஹ்வின் அத்தாட்சிகளும், அழிந்து போன அறிவிலிகளும்' என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.

17 July 2010

துபை சத்வா கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், துபை கிளையான சத்வா கிளையின் ஸ்டீல் பள்ளியில் வைத்து 16.07.2010 வெள்ளிக்கிழமை  இஷாத் தொழுகைக்குப் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது.   இதில்  சகோ. மசூது அவர்கள்  மறுமை சிந்தனையும், நரக தண்டைனையும் ன்ற தலைப்பில்  குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில்  சிறப்பாக உரையாற்றினார்கள்.



இதில் ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

15 July 2010

ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள் ஒரு வரலாற்றுப் பதிவு

மகத்தான இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு   ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய்.நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்  நாடியோரை இழிவுபடுத்துகிறாய்.நன்மைகள் உன் கைவசமே உள்ளன.நீ அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்' என்று கூறுவீராக! (3:26) 
 
கடந்த 04-07-10 ஞாயிறு அன்று சென்னை தீவுத்திடலில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் எழுச்சியுடன் பங்கேற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உங்களுக்கு தருகிறோம். 
 
நீதிபதி மிஸ்ரா, சச்சார் ஆகியோருக்கு நன்றி

இந்திய நாட்டை உருவாக்குவதிலும்,இந்தியாவின் அடிமைத்தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளன. முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெளிவான பரிந்துரையையும் வழங்கியுள்ளது.முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இதற்காக இம்மாநாடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

14 July 2010

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்


இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.
குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.
 
இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.

துபை தலைமையில் வாராந்திர பயான்


கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அணைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு பீறுநடைப் போட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமையில் நடந்துவரும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடராக கடந்த 09.07.2010 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 10.15 மணி வரை 'மகத்தான இரட்சகனின் கிருபையும், மாநாட்டின் வெற்றியும்' என்ற தலைப்பில் சகோ. முஹம்மது நாஸர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.

11 July 2010

சோனாப்பூரில் வாராந்திர பயான்

கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அணைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு பீறுநடைப் போட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோனாப்பூர்  அஸ்கான் பள்ளியில்  தொடர்ந்து நடைபெற்று வரும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடராக கடந்த 09.07.2010 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 10.15 மணி வரை 'மிஃராஜ் தரும் படிப்பினை' என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.

10 July 2010

மாநிலத் தலைவர் அல்தாபி அவர்களின் அவதுாறுகளுக்கு அல்தாபி அவர்களின் நேரடி பதில்கள்

ஜுலை 4 மாநாட்டில் மாநிலத் தலைவரைக் காணவில்லை என்ற  பொய்யர்களின் கேள்விகளுக்கு மாநிலத் தலைவர் சகோ. அல்தாபி அவர்களின் விளக்கங்கள்.

video

நன்றி ஆன்லைன் பி.ஜே

08 July 2010

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதா?

யாரையும் மேடையில் ஏற்றுவதில்லை என்று கூறி வந்த தவ்ஹீத் ஜமாஅத் இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டது என்ற வாதம் சிலரால் எடுத்து வைக்கப்படுகிறது. 

இதற்கு உரிய பதிலைச் சொல்வதற்கு முன்னால் இப்படி கேட்பவர்கள் பற்றியும் நாம் சுட்டிக்காட்டும் அவசியம் இருக்கிறது.

மாநாடு நடப்பதற்கு முன் அனைவரையும் அழைக்க வேண்டும்; எங்களையும் அழைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டது. அப்போது இந்தக் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. ஏனெனில் மாநாட்டுக்கு மக்கள் வர மாட்டார்கள்; மாநாட்டுக்குப் போகக் கூடாது என்று நாம் பரப்பிய செய்திகளால் தீவுத்திடலில் சமாதி கட்டப்படும் என்று கனவு கண்டார்கள். 

அதை வெளிப்படையாகவும் சொன்னார்கள். அவர்களுக்குப் பல நாட்கள் தூக்கம் இல்லாமல் செய்யும் அளவுக்கு மாநாடு முஸ்லிம் சமுதாயத்தின் பேராதரவுடன் வரலாற்றுச் சாதனை படைத்ததைப் பார்த்து திகைத்துப் போனவர்கள் மாநாட்டின் நோக்கத்தைத் திசை திருப்பும் வகையில் எதையாவது எழுதாவிட்டால் தங்கள் மண்டை வெடித்து விடும் என்று கருதி ஏற்கனவே சரியாகப் புரிந்து வைத்திருந்ததை இப்போது தவறாகச் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். இதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறோம்.

மிஃராஜ் தரும் படிப்பினை

கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

'மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற் காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன். பார்ப்பவன்'      (அல்குர்ஆன் 17:1)
 
விண்ணுலகப் பயணம் (மிஃராஜ்) அண்ணலாரின் நபித்துவ வாழ்வில் பொன்னைப் போல் ஒளிரும் ஒரு உண்மை நிகழ்ச்சியாகும். இந்த மிஃராஜ் பயணம் வரலாற்றில் எத்தகைய புதுமையையும், புரட்சியையும் தோற்றுவித்தது? எவ்வாறு திருப்பு முனையாக அமைந்தது? என்பதை எண்ணிப்பார்ப்போர் நம்மில் மிகச் சிலரே இருக்கிறார்கள். 'மிஃராஜ்' என்ற பயணம் வல்ல நாயன் அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட அற்புதமாகும்.

அதில் என்ன மாதிரியான படிப்பினைகளெல்லாம் நமக்கு கிடைத்திருக்கின்றன என்பதை நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு இஸ்லாமிய சமுதாய அமைப்பு எப்படிப்பட்ட அடையாளங்களைத் தன்னுள் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அற்புத படிப்பினை மிஃராஜில் அடங்கியிருப்பதை நாம் காணலாம். நாம் வாழுகின்ற இந்த பூமி அல்லாஹ்வின் ஆட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய எல்லையாகும். இந்த பூமியின் பிரதிநிதிகளாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் உள்ளனர்.

07 July 2010

மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி யை TNTJ ஒதுக்குகிறதா?

பிரதமரைச் சந்திக்கச் சென்ற குழுவில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஏன் செல்லவில்லை? அவரை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அல்தாபி தனது குடும்பத்தை திருச்சிக்கு மாற்றிய போதும் அவரைப் புறக்கணிப்பதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.
இத்தகைய சந்தேகம் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு இருந்தால் விளக்கம் கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு பதில் சொல்லும் கடமை ஜமாஅத்துக்கு உண்டு.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேராதவர்கள் இது பற்றி கேள்வி எழுப்ப எந்த உரிமையும் இல்லை. ஒரு இயக்கத்தில் யாரை எதற்குப் பயன்படுத்துவது என்பதை அந்த இயக்கம் தான் முடிவு செய்யும். அந்த இயக்கத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு எடுக்கும் முடிவு தான் அந்த இயக்கத்தின் முடிவாகும். இதைப் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிக்காத எவருக்கும் கேள்வி கேட்க உரிமை இல்லை. அவர்களுக்கு பதில் சொல்லும் அவசியம் ஜமாஅத்துக்கும் இல்லை.

06 July 2010

பல மொழிப் பத்திரிக்கைகளில் வெளியான மாநாட்டுச் செய்திகள்

மாநாட்டு செய்திகள் பல்வேறு மொழி பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளன.


ஆந்திர ஜோதி (தெலுங்கு)


தினத் தந்தி (தமிழ்)


ஜுலை மாநாட்டின் எதிரொலி - TNTJ நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இடஒதுக்கீடுக்காக போராட்டத்தில்  இலட்சக்கணக்கான  மக்கள் வெள்ளத்தில் சென்னை திக்குமுக்காடிப்போனது. இந்த போராட்டத்தின் விளைவாக முஸ்லிம்களின் இடஒதுக்கீடு சம்பந்தமாக விளக்கம் கேட்டு பிரதமர் மன்மோன் சிங் அழைத்ததன் அடிப்படையில் சகோ. பி.ஜைனுலாப்தீன், சகோ. ஷம்சுல்லுஹா, சகோ. அப்துல்ஹமீது, சகோ. கோவை ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் டெல்லி சென்றனர். ன்று (06-07-2010) காலை மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து இடஒதுக்கீடு சம்பந்தமாக விளக்கமளித்தனர். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.


05 July 2010

ஜுலை 4 மாநாடு சம்பந்தமாக எடுபடாத வாதங்கள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்றைய தினம் மக்கள் வெள்ளத்தில் மிதந்த சென்னை மாநகரில் ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...

இந்த மாநாடடிற்கு மக்கள் கூட்டம் வராமல் தடுப்பதற்காக பாப்புலர் ஃபிரண்ட் இந்தியா, ஷம்சுதீன் காசிமி (இட ஒதுக்கீட்டிற்காக ஜெயலலிதாவை சந்தித்தவர்), ஜாக், அபூ அப்துல்லாஹ் மற்றும் மிகக் கேவலமான முறையில் செயல்பட்ட பொய்யன் பாக்கர் கூட்டத்தினர் இவர்களின் செயல்பாடுகளை தோலுரித்து சகோ. பிஜே அவர்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் அதனைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

03 July 2010

துபை மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - துபை மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 02/07/2010 அன்று காலை 8.00 மணியளவில் துபை – அல் வாசல் மருத்துவமனையில் ஆரம்பமாகியது. வாரத்தில் 6 நாட்கள் பரபரப்பாக உழைக்கும் வெளி நாடுகளில் தங்கியிருக்கும் சகோதரர்களுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் தான் முழு ஒய்வு எடுப்பதற்க்கு உரிய நாள். ஆயினும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே  இரத்த தானம் செய்ய சகோதரர்கள் படையெடுத்து வந்தது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.

துபை கிளையான தேய்ரா, சத்வா, ஹோர்-அல்-அன்ஸ், சோனாப்பூர், ஜெபல் அலி , அல்கூஸ், ஆகிய பகுதிகளிருந்து ஆர்வமுடன் பங்கேற்ற சகோதர்களுக்கு அந்தந்த பகுதி கிளை பொறுப்பாளர்கள் அழகிய முறையில் வாகன ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

மதியம் 2மணிவரை நடைப்பெற்ற முகாமில் 152 சகோதரர்கள் கலந்து கொண்டு 129 சகோதரர்கள் குருதி தானம் அளித்தனர்.

துபை ஹோர் அல் அன்ஸ் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் கிருப்பையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், துபை கிளையான ஹோர் அல் அன்ஸ் கிளையில் 02.07.2010 வெள்ளிக்கிழமை  இஷாத் தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில்  சகோ. இபுராஹீம் அவர்கள்  மறுமை வெற்றிக்கு என்ன வழி?ன்ற தலைப்பில்  குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் சிறப்பாக உரையாற்றினார்கள்.

இட ஒதுக்கீடு கோரி ஜூலை 4ல் முஸ்லிம்கள் பேரணி: தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு

சென்னை: ''ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி, முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி,  வரும் 4ம் தேதி, சென்னையில் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்படும்,'' என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், முஸ்லிம்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜைனுலாபுதீன் தலைமை வகித்தார். மூத்த பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்களும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

கருத்தரங்கம் முடிவில், ஜைனுலாபுதீன் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என 2004 லோக்சபா தேர்தலின்போது, காங்கிரஸ், தேர்தல் அறிக்கையில் கூறியது. இதை நம்பி முஸ்லிம்கள், காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். ஐந்தாண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தும், 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பிரதமர், 'அனைத்துக்கட்சிகளிடம் ஒத்த கருத்து வந்த பிறகு இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என, கூறியுள்ளார். பிரதமர், தரமாட்டோம் என்று சொல்லாமல் சொல்கிறார். எனவே, ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி, முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி, சென்னையில் வரும் 4ம் தேதி பேரணி மற்றும் மாநாடு நடத்துகிறோம். இது கோரிக்கை மாநாடு அல்ல; உரிமை மீட்பு மாநாடு. எங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கும் மாநாடாக இருக்கும். மத்திய அரசு அலட்சியம் காட்டினால், முஸ்லிம்கள் ஓட்டு இனி, காங்கிரசுக்கு இல்லை என அறிவிப்போம். இந்தியா முழுவதும் இந்த கருத்தை முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு ஜைனுலாபுதீன் கூறினார்.

நன்றி - தினமலர்

01 July 2010

கல்வி சேவையில் TNTJ மாணவர் அணி வரலாற்று சாதனை

கல்வி சேவையில் TNTJ மாணவர் அணி வரலாற்று சாதனை - தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 255 கல்வி சேவை நிகழ்சிகளை 154 இடங்களில் நடத்தி மாபெரும் சரித்திர சாதனை படைத்துள்ளது.

அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவர் அணி இதுவரை 255 கல்வி சேவை நிகழ்சிகளை 154 இடங்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (புதுசேரி உட்பட) நடத்தி சரித்திர சாதனை புரிந்துள்ளது .

இதுவரை எந்த முஸ்லிம் அமைப்புகளோ, அறக்கட்டளைகளோ, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கல்வி வழிகாட்டும் நிகழ்சி நடத்தியது இல்லை, நமது மாணவர் அணி இதை சாதித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ் இந்த அரிய பணிக்கு அல்லாஹ் நம்மை தேர்ந்தெடுத்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருக்கின்றது. இரத்த தான சேவையை தொடர்ந்து, கல்வி சேவையிலும் நாமே முதல் இடத்தில் இருக்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ். இனி யாரவது இத்தகைய சாதனையை செய்தாலும் முதலில் அனைத்து மாவட்டங்களிலும் கல்வி சேவை செய்தது நமது TNTJ மாணவர் அணி தான் (இடங்களின் முழுவிபரம் கீழே தரப்பட்டுள்ளது). இது போக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 180 இடங்களுக்கு மேலாக மாணவர் அணியை நிறுவி உள்ளோம்.