Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - உரை: முஷ்த்ரீ பானு (லெப்பைகுடிகாடு), தலைப்பு : ஏகத்துவம்,நாள்: 25/05/2013(மக்ரிப் தொழுகைக்குப் பின்பு), இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite: Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

31 August 2010

லைலத்துல் கதர் இரவு !

கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...   

(இந்த அல்குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்இ ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வெரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

கண்ணியமிக்க ரமளானில் கடைசிப்பத்தில் நாமெல்லாம் இருந்து வருகின்றோம். ரமளான் பிறை 27 என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது லைலத்துல் கத்ர் உடைய இரவுதான். பொதுவாகவே மற்ற நாட்களை விட ரமளானில் பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பிறை 27 வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மக்கள் வெள்ளத்தால் பள்ளிவாசலே திக்குமுக்காடிப் போய்விடும்.

காரணம் அன்று தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் உடைய இரவு என்று பரவலாக மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகின்றது. பல ஹஜ்ரத் மார்களும் பிறை 27 தான் லைலத்துல் கத்ர் என்று சொல்லி வருகின்றனர். சில அறிஞர்கள் பிறை 27 ல் இல்லை என்று மறுத்தாலும்,'பெரும்பாலான சான்றோர்களின் கருத்து' என்று சொல்லி மழுப்பி வருவதை பார்க்கின்றோம்.

உண்மையான இறைநம்பிக்கை - வீடியோ

உரை - சகோ. அப்துந் நாஸிர்
இடம் - துபை TNTJ மர்கஸ்



(PLAY செய்து ஒன்றிரண்டு நிமிடங்கள் காத்திருக்கவும்)

29 August 2010

துபை, தேய்ரா TNTJ தலைமையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


(படத்தைப் பெரிதாகப் பார்க்க படத்தில் கிளிக் செய்யவும்)

ஒற்றுமைக்கு வழி என்ன?

திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர்.

  • அடி உதைகளுக்கு ஆளானார்கள்.
  • ஊரை விட்டு விலக்கி வைக்கப் பட்டனர்.
  • பொய் புகார் கூறி சிறையில் அடைக்கப் பட்டனர்.
  • சொந்த பந்தங்களுக்குப் பகையாயினர்.   
  • இப்படி ஏராளமான தியாகங்களுக்கு மத்தியில் தான் கொள்கையைக் கடைப்பிடித்தனர்.
இவ்வாறு தியாகம் செய்து கொள்கையை ஏற்றவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே கவலை ''ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்தவர்கள் பிளவு பட்டு நிற்கின்றார்களே?'' என்பது தான்.

இது கவலைப்படக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.  அதே சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகவே பாடம் பயின்ற நபித்தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து இருபது ஆண்டுகளுக்குள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தாங்கிப் போரிடும் அளவுக்குப் பகைவர்களாகிப் போயினர்.

28 August 2010

துபை ஹோர் அல் அன்ஸ் கிளையில் நடந்த சிறப்பு ரமளான் சொற்பொழிவு

கடல்  கடந்து  வாழ்ந்தாலும் தான்  ஏற்றுக் கொண்ட  ஓரிறைக் கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொள்ள  வேண்டும், மானுட  சமூகம்  இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு  பீறுநடைப் போட்டு  வரும்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  துபை  மண்டலத்தின் ஹோர் அல் அன்ஸ் கிளையில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை வாராந்திர சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம்.



26 August 2010

துபை - ஹோர் அல் அன்ஸ் கிளையில் இன்று (26-08-2010) ரமளான் சிறப்பு சொற்பொழிவு

(படத்தைப் பெரிதாகப் பார்க்க படத்தில் கிளிக் செய்யவும்)

25 August 2010

உம்ரா வழிகாட்டி அதிகமான விளக்கங்களுடன்...

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2 : 196)

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல் குர்ஆன் 3 : 96, 97)

ஹஜ், உம்ராவின் அவசியத்தையும் சிறப்புகளையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பணம் மற்றும் உடலால் நாம் செய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இப்புனித வழிபாட்டை குர்ஆன் மற்றும் நபி வழி முறைப்படி நிறைவேற்ற வேண்டும்.

ரமளான் அல்லாஹ்வின் அருட்கொடை - வீடியோ

உரை - சகோ. அப்துந் நாஸிர்
இடம் - துபை TNTJ மர்க்கஸ்


(PLAY செய்து ஓன்றிரண்டு நிமிடங்கள் காத்திருக்கவும்)

23 August 2010

வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்

வெட்கம் என்பது மனித இனத்துடன் ஒட்டி ஒன்றிணைந்து பிறந்த ஓர் இயற்கை உணர்வாகும்.  எல்லாம் வல்ல அல்லாஹ் வெட்கத்தை மனிதனின் உணர்வுகளில் ஒன்றாகக் கலந்து படைத்ததன் விளைவாகத் தான் முதல் மனிதர்களான ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் பொங்கி எழுந்த நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விளைகின்றனர்.

அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன.  அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர்.  (அல்குர்ஆன் 7:22)
 
மேலும் மண்ணுலகத்திற்கு மனிதனை இறக்கி வைத்து, அவனுக்கு மரியாதை தரக்கூடிய, அலங்காரமான ஆடையையும் சேர்த்தே இறக்கி வைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம்.  (அல்குர்ஆன் 7:26)

மனிதனுக்கு ஆடை மானத்தை மட்டும் காக்கவில்லை!  மரியாதையைப் பெற்றுத் தரும் அலங்காரமாகவும் அமைந்துள்ளது என்பதை இந்த வசனத்தில் இருந்து தெரிந்து கொள்கின்றோம்.  மானம் மனிதனுடன் ஒட்டிப் பிறந்ததன் பின்னணியாகத் தான் காட்டுவாசிகளாக இருந்தாலும் ஆண்கள் ஒரு முழ ஒட்டுக் கோவணத்தைக் கொண்டேனும் அதை மறைக்கத் தவறுவதில்லை.  பெண் வர்க்கம் இதைவிட கூடுதலாக மறைத்துக் கொள்கின்றது.

19 August 2010

வெள்ளிக் கிழமை (20-08-10) உம்ரா வழிகாட்டி நிகழ்ச்சி



(படத்தை பெரிதாகப் பார்க்க படத்தில் கிளிக் செய்யவும்)

18 August 2010

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!

சமீபத்தில் திருச்சி மாநகராட்சி 28-வது வார்டுக்கான இடைத் தேர்தல் நடந்தது. இதில் தமுமுகவின் மமக சார்பில் மீராமைதீன் என்பவர் போட்டியிட்டார். 

இவர் அப்பகுதி மக்களிடம் கையெடுத்துக் கும்பிட்டு ஓட்டுக் கேட்டது முகம் சுளிக்க வைத்தது. அரசியலுக்கு வந்துவிட்டால் எப்படியெல்லாம் மாறுவார்கள் என்பதற்கு மமக-வே சாட்சியாகி வருகிறது. 

இதனிடையே கடந்த வாரம் இதன் மாநில நிர்வாகிகள் அதிமுக தலைமையை நேரில் சந்தித்து தங்களது அரசியல் சதுரங்கத்தின் அடுத்த கட்டத்தைத் துவங்கியிருக்கன்றனர். அரசியலுக்கு வந்த இவர்கள் இன்னும் எப்படியெல்லாம் மாறுவார்களோ என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இவர்களது தவ்ஹீத் எழுச்சி(?)யைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

28வது வார்டு முஸ்லிம்கள்,
திருச்சி, செய்தி - தினத்தந்தி

- நன்றி உணர்வு வார இதழ்

17 August 2010

இரவுத் தொழுகையின் சட்டதிட்டங்கள்

மௌலவி கே. எம். அப்துந் நாஸிர்
 
கடமையான தொழுகைக்கு பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்தது நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல்கள் : முஸ்­லிம் (1982),

இரவில் தொழப்படும் தொழுகைக்கு பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்து தொழும் தொழுகை) ஆகிய பெயர் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

ரமலான் மாத்தில் தொழப்படும் இரவுத்  தொழுகைக்கு பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றன. இந்த பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.

நோன்பின் அதிகப்படியான விளக்கங்கள்

மௌலவி கே. எம். அப்துந் நாஸிர்

பிறையை கண்களால் பார்த்துதான் ரமலானை ஆரம்பிக்க வேண்டும்

'அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)  நூல்: புகாரி 1909

''பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி)  நூல்: புகாரி 1906

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)

ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 1899

15 August 2010

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு ”தங்குதல்” என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.

ரமலானில் இஃதிகாப் எதற்காக?

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.

இஃதிகாபின் ஆரம்பம்

இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007)

இந்திய சுதந்திரம் யாரால்? - சகோ. பி.ஜே உரை

நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டு இரத்தம் சிந்தியது யார்? இதில் இஸ்லாமியர்களின் பங்குகள் என்ன? என்பதை விளக்கும் சகோ. பி.ஜே அவர்களின் வீடியோ. ஐந்து பாகங்களாக உள்ளது பார்க்க.

14 August 2010

நோன்புப் பெருநாள் தர்மம்


ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
 
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.


ஃபித்ராவின் நோக்கம்


இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது. நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

நோன்பின் சிறப்புகள்


கண்ணியமும் இரக்கமும் நிறைந்த பேரன்பாளன் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
'நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுடையோராக ஆவதற்காக  உங்களுக்கு முன் சென்றவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது'. (அல்குர்ஆன்: 2 : 183)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக நோன்பு எனக்கு உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்' என்று அல்லாஹ் கூறுகிறான். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) புகாரி 1904)
 
மனித சமுதாயத்தின் துவக்கத்திலிருந்து இறையச்சம் என்பது ஒரு தலையாய நற்போதனையாக போதிக்கப்பட்டு வருவதை மேற்கூறிய இறைவசனம் மூலம் நாம் உணரலாம். 

இறையச்சத்தை மையமாகக் கொள்ளாத வாழ்க்கை அச்சாணி இல்லாத வண்டியில் பயணிப்பதைப் போன்றதாகும். ஆபத்துகளும் இழப்புகளும் எந்த நேரமும் ஏற்படும் அபாய நிலையாகும். இறைநம்பிக்கை என்பது வெறுமனதாக இல்லாமல் இறையச்சத்தால் மெருகேறியதாகவும், முறுக்கேறியதாகவும் இருத்தல் வேண்டும். கண்மூடித்தனங்களாலோ, மனம் போன போக்குகளாலோ ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கை அமைந்து விடக் கூடாது என்பதில் ஏக இறைமார்க்கம் மிகுந்த அக்கறை கொண்டு கூறுகிறது.

ஹோர் அல் அன்ஸ் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், துபை கிளையான ஹோர் அல் அன்ஸ் கிளை போஸ்ட் ஆபீஸ் பள்ளியில் வைத்து வழக்கமாக வெள்ளிக் கிழமை இஷாவிற்குப் பிறகு நடைபெறும் வாராந்திர பயானை ரமளானை முன்னிட்டு ரமளான் மாதம் மட்டும் வியாழக் கிழமை  (12-08-2010) இரவுத் தொழுகைக்குப் பிறகு ஹோர் அல் அன்ஸ் கிளை ஏற்பாடு செய்திருந்தது.  இதில்  சகோ. முஹைதீன்  அவர்கள்  நன்மையை வளர்க்கும் ரமளான் மாதம் ன்ற தலைப்பில்  குர்ஆன் மற்றும்  ஹதீஸின் அடிப்படையில்  சிறப்பாக உரையாற்றினார்கள்.

11 August 2010

கதையல்ல நிஜம் தாயினாலேயே நிர்வாணப்படுத்தப்பட்ட மகள். விஜய் டிவியில் பரபரப்புப் பேட்டி. களத்தில் TNTJ

கதையல்ல நிஜம் தாயினாலேயே நிர்வாணப்படுத்தப்பட்ட மகள். விஜய் டிவியில் பரபரப்புப் பேட்டி. களத்தில் TNTJ



 வீடியோ மற்றும் பின்னனித் தகவல்கள்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற ஊரில் ஒரு சகோதரிக்கு ஏற்பட்ட கொடுமை ஊரையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.


அதாவது கடந்த 9.08.2010 அன்று விஜய் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரி தனக்கு நடந்த அவலத்தை அந்த நிகழ்சியில் தெரிவித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.


ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை அடைய முயற்சிப்பதாகவும் அவர் தன்னை துன்புருத்துவதாகவும் அந்த நிகழ்சியில் தெளிவாக குறிப்பிட்டதுடன் இதற்கு தனது தாயும் தந்தையும் கூட உடந்தை என்பதை பகிரங்கமாக தெரிவித்தார்.


நடந்தது என்ன?


விஜய் டிவியின் நிகழ்சிக்கு முன் இந்த சகோதரிக்கு நடந்தது என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.


அதாவது கடந்த 19.02.2010 அன்று கோவை குனியமுத்தூர்  போலிஸ் நிலையத்தில் சபிய்யா பானு என்ற சகோதரி தனது தாய் மாமனுடன் சென்று ஒரு வழக்குப் பதிவு செய்தார்.


ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை மானபங்கப் படுத்த முயல்வதாகவும்.அதற்கு தனது தாயும் தந்தையும் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் தன்தை ஆரச்சாமிக்கு திருமணம் முடித்துக் கொடுக்க முயல்வதாகவும் இதனைத் தடுத்து நிருத்த காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் அவர் புகார் பதிவு செய்தார்.

துபை, தேய்ரா தலைமை மர்கஸில் 9ம் ஆண்டு தொடர் பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி


(படத்தைப் பெரிதாகப் பார்க்க படத்தில் கிளிக் செய்யவும்)

சஹர் பாங்கு: நபிவழியை நடைமுறைப்படுத்துங்கள் !!!


மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால்,ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.
பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தீன்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பிலாலின் அதான் (பாங்கு) ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அதான் (பாங்கு) சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 621
பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி,5299.7247 முஸ்லிம், நஸயீ.

மேற்கண்ட நபிமொழியை நடைமுறைப் படுத்தும் முகமாக அனைத்தப் பள்ளிவாசல்களிலும் சஹர் நேரத்தில் பாங்கு சொல்லி நபிவழியை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.
-TNTJ மாநிலத் தலைமையகம்
thanks www.tntj.net

10 August 2010

நோன்பின் சட்டங்கள்

ஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்று, அதன் படி எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பிரசுரம் வெளியிடப்படுகிறது. புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும்.
 
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதும்,தெளிவான சான்றுகளைக் கொண்டதும், (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்.
(அல்குர்ஆன் 2:185)
 
நோன்பின் நோக்கம்:
'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ, அவர் பசித்திருப்பதோ,தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, திர்மிதி,இப்னுமாஜா.
 
'நோன்பு நோற்றிருக்கும் போது, உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் - அறியாமையாக நடந்து கொண்டால் - ஏசினால் நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, திர்மிதி.

07 August 2010

துபையில் நடைபெற்ற மாபெரும் 7 ஆம் ஆண்டு திருக்குர்ஆன் மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - துபை மண்டலத்தின் சார்பாக கடந்த 06-08-2010 வெள்ளிக்கிழமை மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு நடைபெற்றது. துபை மண்டலத்தின் சார்பாக புனித ரமலானை வரவேற்கும் முகமாக ஒவ்வோர் ஆண்டும் திருக்குர்ஆன் மாநாடு நடத்துவது வழக்கம்.

அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் ஜுமைரா ஷைய்கா ஹிந்த் பின்த் மக்தூம் ஸ்போர்ட்ஸ் ஹாலில்  (ஜுமைரா போஸ்ட் ஆபீஸ் பின்புறம்) மாலை ஐந்து மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு மண்டல துணைத்தலைவர் முஹம்மது ரபீக் தலைமை வகித்தார்.

04 August 2010

06-08-2010 (வெள்ளிக் கிழமை) அமீரகம் தழுவிய திருக்குர்ஆன் மாநாடு

ரமளான் மாதத்தை முன்னிட்டு வழக்கம்போல் வரும் ரமளானுக்கும் முன்னும் 7 வது வருட மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு 06-08-2010 (வெள்ளிக் கிழமை) இன்ஷா அல்லாஹ் நடைபெறவிருக்கிறது. அனைவரும் கலந்து பயன் பெறவும்.


(படத்தை பெரிதாகப் பார்க்க படத்தில் கிளிக் செய்யவும்)

பார்வை ஒன்றே போதும்

ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும்.

நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ''இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றேன்'' என்று கூறினேன்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், ''முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்'' என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி),  நூல் : புகாரி 58

இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் நம்முடைய சக கொள்கைவாதிக்கு நன்மையைக் கருத வேண்டும்.  அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.  இதை ஆதாரமாகக் கொண்டு நாம் ஒரு தவறைச் சுட்டிக் காட்ட முனைகின்ற போது அவரிடம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து விடக் கூடாது.

தவறைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு முரட்டுத்தனம் வந்து விடக் கூடாது.  தவறை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை இஸ்லாம் தகவாக சொல்லிக் காட்டுகின்றது.  இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ள முன்னுதாரணத்தை வாழ்க்கையில் நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்து, ''யா அல்லாஹ்! எனக்கும் முஹம்மதுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் நீ மன்னிப்பளிக்காதே!'' என்று சொன்னார்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே சிரித்து விட்டார்கள்.  ''(அல்லாஹ்வின்) விசாலமான தன்மைக்கு நீ தடை விதிக்கின்றாயே!'' என்று கூறினார்கள்.

02 August 2010

புனிதமிகு ரமளான்

இந்தப் பரந்த பூமியைப் படைத்து, அதில் மிகச் சிறந்த படைப்பினமாக உருவாக்கப்பட்டுள்ள மனிதனுக்கு இறைவன் ஏராளமான அருள்களைப் புரிந்துள்ளான். அவனது மாபெரும் அருளுக்கு எடுத்துக்காட்டாக இந்த ரமளான் மாதமும் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடந்து, அவன் தவிர்ந்திருக்குமாறு கூறியவற்றை விட்டும் விலகியிருந்து, சொர்க்கத்தைப் பெற வேண்டிய மனிதன் தவறான காரியங்களில் அதிகம் ஈடுபட்டு ஏராளமான பாவங்களைச் சுமப்பவனாக மாறி வருகிறான். மேலும் மிக மிக சொற்பமான நல்லறங்களையே செய்கின்றான்.

இவர்களைப் போன்றவர்களுக்கு அளவற்ற அருளான் தரும் மாபெரும் சலுகைக் காலம் தான் இந்த ரமளான் மாதம். இந்த மாதத்தில் செய்கின்ற ஒவ்வொரு நல்லறத்திற்கும் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். ஏராளமான பாவங்களை அழிக்கின்றான். அதிலும் குறிப்பாக இரவுத் தொழுகையைத் தொழுபவருக்கு முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

மேலும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் செய்கின்ற நல்லறங்கள் ஆயிரம் மாதங்கள் செய்த நன்மைக்கு ஒப்பானதாகும். இவ்வாறு இந்த மாதத்தில் செய்யப்படும் நல்லறங்கள் கூடுதல் சிறப்பைப் பெற்றிருப்பதால் மற்ற மாதங்களில் செய்கின்ற நல்லறங்களை விடக் கூடுதலாக செய்து சொர்க்கத்தை கடமையாக்கிக் கொள்ள வேண்டும்.

அருள் நிறைந்த மாதமாக ரமளான் மாதம் திகழ்வதால் நபி (ஸல்) அவர்கள், ''ரமளான் மாதம் வந்துவிட்டால் ரஹ்மத்தின் (அருளின்) வாசல்கள் திறக்கப்படுகின்றன'' என்று குறிப்பிட்டார்கள். எனவே இந்த அருள் நிறைந்த மாதத்தில், நன்மைகளை இழந்து விடும் செயல்களில் ஈடுபடாமல் நல்லறங்களிலேயே ஈடுபட்டு சொர்க்கத்திற்குரியவர்களாக மாறுவோம்.

ரமளானை வரவேற்போம்

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்..... 'இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும'. (அல்குர்ஆன் 2:185)
 
மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37)
 
ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.

இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க திருக்குர்ஆன் இறக்கி யருளப்பட்ட மாதம் ரமளான்.