Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபாயில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

27 March 2011

திமுகவை ஆதரிக்க என்ன காரணம் ?


அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.
இறைவனின் மாபெரும் கிருபை:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எங்களுக்கு 2 சீட்டு கிடைத்தால் போதும், நாங்கள் எப்படியாவது எம்எல்ஏ அல்லது எம்பியாக ஆகிவிட மாட்டோமா? அல்லது எனக்கு ஒரு வாரிய பதவியும், அவருக்கு ஒரு காரிய பதவியும் கிடைத்தால் போதுமே! காலத்துக்கும் கொண்டை விளக்கு வைத்த வண்டியிலே ஒய்யார பவனி வரலாமே என தவமாய்த் தவமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி சமுதாய மக்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் சுய லாபங்களைத் தீர்த்துக் கொள்ளும் சமுதாய அமைப்புகள் உள்ளன.
இவர்களுக்கு மத்தியில், எங்கள் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ அல்லது அமைப்பின் தலைவர்களை தனியாகச் சந்தித்து டேபிளுக்கு கீழே அழுத்தும் வேலைகளுக்கோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.
கொள்கை ரீதியாக மடித்துக்கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கும் யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய‌ கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம் எனலாம். சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரப்போகும் தேர்தலையும் சமுதாயத்தின் நன்மையை முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்தது.

சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன ?


வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம். இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம்.

23 March 2011

இளைஞர்களின் கணவு படிப்பு – MBA என்றால் என்ன??


- பரங்கிப்பேட்டை T.H.கலீல்லூர் ரஹ்மான்.,MBA

இன்றைக்கு பொறியியல் படிக்கும்மாணவர்களாக இருந்தாலும் சரி கலை,வணிகவியல் மற்றும் அறிவியல் சார்ந்தமாணவர்களாக இருந்தாலும் சரி அவர்கள்அடுத்து தேர்ந்தேடுக்க விரும்பும் கணவுமேற்படிப்பு Master Of Bussiness Administration (MBA)என்பதாகும்.

இதற்க்கு சாண்றாக தமிழகத்தில் வளர்ந்து வரும் MBA படிப்புகளுக்கான கல்விநிறுவணங்கள் உள்ளது. மருத்துவர் , என்சினியர் வழக்கறிஞர் என்றவரிசையில் ஏன் அதற்க்கும் மேலாக மதிப்பும் மரியாதையும் கொண்டதுறையாக இது வளர்ச்சி பெற்று இருக்கின்றது

உங்களிடம் MBA படிக்கும் ஆசை இருந்தால் அதை நினைவாக்கும் வகையில்அந்த படிப்பை பற்றி உங்களுக்கு விளங்க செய்வதே இதன் நோக்கம்.

உங்கள் ஊரில் அப்துல் காதர் என்பவர்ஒரு சாதாரன உணவகம் வைத்து நடத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்அந்த கடையில் அன்றாடம்என்ன நடக்கின்றது என்று பார்த்தாலே போதும் MBA என்றால் என்ன என்பதைநாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அந்த கடையை கவணிக்கும் நபர் அதிகாலையில் உணவகத்திற்க்காக பால்பூத்தில் பால் வாங்குகிறார் பிறகு மளிகை கடைக்கு சென்று டீ தூள் சர்க்கரைஉணவு செய்வதற்க்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கிவருகிறார்நாள் முழுவதும் வியாபாரம் நடக்கின்றதுஇரவு உணவகத்தைமூடும் முன் அவர் வரவு செலவு கணக்கு பார்க்கிறார்.

தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ABCD (SDPI PFI etc..) ரவுடி கும்பல்


ஜிஹாத் எனும் பெயரால் இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர்.
அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
நோட்டீஸ் விநியோகிக்க சென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். இரண்டு பேர் மட்டும் தான் நோட்டீஸ் கொடுப்பதை அறிந்து கொண்ட இந்த ரவுடிகள் கூட்டமாக சேர்ந்து இருவரை கோழைத்தனமாக தாக்கி உள்ளனர்.
விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள தயங்கும் இந்த கோழைகள், அந்த இரண்டு நிர்வாகிக்ளையும் அடித்து உதைத்த பின்னர் இறந்து விட்டதாக நினைத்தார்களோ அல்லது இறந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என நினைத்தார்களோ அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர்.

அவசரப் பொதுக்குழு அறிவிப்பு – இன்ஷா அல்லாஹ் சென்னையில் மார்ச் 26 ல் !


மிழக சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது, முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மை அளிக்கும் என்பதைப் பற்றி சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஆய்வு செய்யப்பட்டது.
தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் வெளியிடாததாலும் கூட்டணிகள் முடிவாகாததாலும் அப்போது முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை.
இதன் பின்னர் நடத்தப்பட்ட மாநில செயற்குழுவின் போதும் அரசியல் நிலமை தெளிவாகாமல் இருந்தது. ஆனால் தற்போது கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு விட்டன. வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன.
மேலும் தேர்தல் அறிக்கையும் பெரும்பாலும் வெளியிடப்பட்டு விட்டன. தேர்தல் குறித்து முடிவு செய்ய ஏற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் வருகின்ற 26-3-11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை இம்பீரியல் ஹால் – எழும்பூர்- இல் மாநில அவசரப் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இதையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Source: www.tntj.net

இந்த வார உணர்வில் (மார்ச் 25) …


உலகம் தான் முடிவா?


கண்ணியமிக்க வல்லோன் தன் திருமறையில் கூறுகிறான்:

இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா? (அல்குர்ஆன்: 29 : 64)

நாம் வாழும் இவ்வுலகம் இயல்பாய் சுற்றிக் கொண்டிருக்க தன்னுடைய எந்த பங்கும் இல்லாத மனிதன், இறைவன் தந்த உடலை வைத்துக் கொண்டு இயந்திரமாய் உழைக்கிறான். படைத்த இறைவன் மனிதனுக்கு 24 மணி நேரம் கொடுத்தும், நேரம் பற்றாக்குறை.ஆனால் மனிதனைச் சுற்றியுள்ள அண்ட சராசரங்களான வானம், பூமி, அண்ட கோளங்கள், கடல், விண்மீன்கள், மற்றும் மற்ற உயிரினங்கள் அனைத்தும் தங்களை படைத்த இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கின்றன. 

அதைதான் அல்லாஹூதஆலா தன் திருமறையில்:
இடியும் அவனைப் போற்றி புகழ்கின்றது (அல்குர்ஆன்: 13:13) மேலும்,ஏழு வானங்களும், பூமியும் அவற்றில் உள்ளவைகளும் அவனைத் துதிக்கின்றன. அவனைப் போற்றி புகழாத எதுவுமே இல்லை. ஆயினும் அவை துதிப்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள மாட்டீர்கள். அவன் சகிப்புத் தன்மை மிக்கவன். மன்னிப்பவன் (அல்குர்ஆன்: 17:44)

இவையனைத்தும் இறைவனைப் போற்றி புகழ்ந்துக் கொண்டிருக்க, ஆறறிவு கொடுக்கப்பட்ட மனிதர்களாகிய நாம், நம்மை படைத்த இறைவனை மறந்து, இவ்வுலக வாழ்க்கை தான் வாழ்வு, இதற்கு பின் ஒன்றுமில்லை என்கின்ற எண்ணத்துடன் நம்முடைய வாழ்க்கையை கழித்து வருகிறோம்..
 

16 March 2011

இந்த வார உணர்வில் (மார்ச் 18)


15 March 2011

சிலை திறப்பும், சீரழியும் வரிப்பணமும்...


குழந்தை ஒன்று அன்னைக்கு அருகில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முகத்தில் கொத்துக் கொத்தாக ஈக்கள் மொய்க்கின்றன. மூக்கிலும், முகத்திலும் உள்ள அழுக்குகளால் ஈர்க்கப்பட்ட ஈக்களை தூக்கக் கலக்கத்திலேயே பிஞ்சுக் கைகள் துரத்துகின்றன. ஆனால் ஈக்கள் தூரப் போக மறுக்கின்றன. மீண்டும் மீண்டும் ஈக்கள் அந்தக் குழந்தையின் முகத்தில் படையெடுத்துத் தாக்கிக் கொண்டிருக்கின்றன.

அதிகாலை நேரத்தில் இரயி­ல் இருந்து இறங்கி மண்ணடி சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது இந்த அலங்கோலக் காட்சி கண்ணில் படுகின்றது. காண்போர் இதயங்களைக் கனக்கச் செய்கிறது. கண்களில் நீரை வரவழைக்கின்றது.

அவர்கள் உண்ணுவதும், உறங்குவதும் அங்கு தான். அவர்கள் சமைப்பதும், சட்டி சாமான்கள் கழுவுவதும் அங்கு தான். குளிப்பதும், துவைப்பதும் அந்த இடத்தில் தான். அங்கு நாய்களும், பன்றிகளும் நடமாடிக் கொண்டிருக்கும். கொளுத்துகின்ற வெயிலானாலும், கொட்டுகின்ற மழையானாலும் அந்த வீதிகள் தான் அவர்களின் வீடுகள். தாம்பத்ய வாழ்க்கைக்குக் கூட தகுந்த மறைவிடம் இன்றி தவித்து, தத்தளித்து அந்தத் தரைப் படையினர் தங்கள் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சென்னைப் பட்டணத்தின் அகன்ற வீதிகளில் இது போன்று ஆயிரமாயிரம் அவலக் காட்சிகள்.

இப்படி ஒரு சாரார் குடிசை கூட இல்லாமல் தரைப் பிராணிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கூவம் நதிக் கரையில் குடிசை மக்கள்

சிங்காரச் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்கின்ற போது, குபீரென்று ஒரு வாடை குடலைப் புரட்டுகின்றது. மக்கள் தங்கள் மூக்கைப் பொத்தத் துவங்குகின்றனர். கூவம் நதியைக் கடந்ததும் மூக்கிலிருந்து கையை எடுக்கின்றனர். கொஞ்ச நேரம், பேருந்து கூவம் நதியைத் தாண்டுவதற்குள்ளாக மக்களுக்கு அதன் வாடை குமட்டலைக் கொடுக்கின்றது; குடலைப் புரட்டுகின்றது.

13 March 2011

ஆழ்கடலில் அலைகளும், இருள்களும் - சுனாமியால் நாம் கற்க வேண்டிய படிப்பினை...


24:40 அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்.  
அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கும் மேல் மேகம். (இப்படி) 
பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை 
வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை 
ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.



24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ் கடலில் இருள்களும்அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி  நிற்கின்றன.ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக்  கொண்டே சென்று முடிவில் தன்கையையே கண் முன்னால் கொண்டு வந்தால்  அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம் கூறுகின்றது.

பட்டப் பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளிசிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர். சூரியனின் வெளிச்சத்தில் ஊதா,  கருநீலம்நீலம்பச்சைமஞ்சள்ஆரஞ்சுசிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன.சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது. சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும்.  15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும்.  அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது.

இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும் போது அந்த ஒளியைப்  பொறுத்த வரை ஒரு இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும்  முழுமை யாகத் தடுக்கப்படுகின்றதோ அந்த இடத்துக்குநிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். கடலுக்குள் ஆயிரம் மீட்டர் செல்லும் போது கண்கள் தடுமாறுகின்றன. இறுதியில் நிறங்கள் அடியோடு மறைந்து விடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வரும் இரவுகளை என்னால் கருப்பு என்று கூற முடியாது. அந்த அளவுக்கு இருளைக் கடல் அடைந்து விடுகிறதுஅமெரிக்க ஆய்வாளர் பீப் என்பவர் கூறுகிறார்.

08 March 2011

கொள்கை மட்டும் போதாது தொழுகையும் வேண்டும்


இறைவனுடைய மாபெரும் கருணையால் மறுமை வெற்றிக்கு அடித்தளமாக இருக்கக் கூடிய ஏகத்துவக் கொள்கையை ஏற்கும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். இந்த அடிப்படையில் அல்லாஹ் உலகத்தில் வாழும் அனைவரையும் விட நம்மை மேம்படுத்தி இருக்கிறான். அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.

ஆனால் ''இறைவனுக்கு இணை வைக்காமல் இருந்தால் மட்டும் போதும் மறுஉலக வாழ்வில் வெற்றியடைந்து விடலாம்'' என்று நம்மில் பலர் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பெரும்பாலும் நல்லமல்களை நாம் செய்யாமல் இருப்பது இதைத் தான் உணர்த்துகிறது. 

ஏகத்துவக் கொள்கையைக் கடைப் பிடித்தவனுக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் நரகம் செல்லாமல் சொர்க்கம் செல்வானா? என்று நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தின் கடமைகளை சரியாக நிறைவேற்றாத காரணத்தினால் தவ்ஹீத்வாதிகளும் மறுமையில் நரகில் தண்டிக்கப் படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏகத்துவக் கொள்கையுடையவர்களில் சிலர் நரகத்தில் அடுப்புக்கரிகளைப் போன்று மாறுகின்ற அளவிற்கு அங்கே வேதனை செய்யப் படுவார்கள். பின்பு (இறைவனுடைய) அருள் அவர்களுக்குக் கிட்டும். (நரகத்திலிருந்து) அவர்கள் வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசல்களில் வீசப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரைத் தெளித்தவுடன் நதியால் சுமந்து வரப்பட்ட விதை (கரையோரம்) முளைப்பதைப் போல் அவர் (புதிதாக) உருவெடுத்து சொர்க்கத்தில் நுழைவார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: திர்மிதி 2522

தவ்ஹீத் கொள்கையை வைத்து மாத்திரம் நரகத்திலிருந்து தப்பித்து விடமுடியாது என்பதை தெள்ளத் தெளிவாக இந்த ஹதீஸ் எடுத்துரைக்கிறது. நரகத்திற்குச் சென்று விட்டு சொர்க்கத்திற்குள் நுழைவதை விட நரகத்திற்குள் புகாமல் சொர்க்கம் புகுவதே மாபெரும் வெற்றி. இவ்வாறு அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்.

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.  (அல்குர்ஆன் 3:185)

இந்த வார உணர்வில் (மார்ச் 11)


06 March 2011

விபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்


ஒரு மனிதன் சத்தியத்திற்கு வருவதற்கு எத்தனையோ தடைக் கற்கள் உள்ளன. ஒருவன் சத்தியத்திற்கு வர வேண்டும் என்று எண்ணும் போது சமுதாயத்தில் அவனுக்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்து, மரியாதை குறுக்கே வந்து நிற்கும். அதை வைத்து அவனிடம் ஷைத்தான் பல குறுக்குக் கேள்விகள் கேட்பான்.

மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் கிராமத் தலைவராக இருப்பார். அல்லது சட்டமன்ற உறுப்பினராக அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக ஏன்? முதலமைச்சராகக் கூட இருப்பார். நீ இஸ்லாத்திற்குப் போனால் இந்த மரியாதை கிடைக்குமா? என்று ஷைத்தான் அவரிடம் கணக்குப் போட வைப்பான். அவரும் கூட்டிக் கழித்துப் பார்த்து விட்டு, இந்த மரியாதை அங்கு போனால் நமக்குக் கிடைக்காது என்று அவர் அசத்தியத்திலேயே இருந்து விடுகின்றார்.

இது மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஷைத்தான் போடும் தடைக் கல்லாகும். இஸ்லாத்தின் பெயரிலேயே அசத்தியத்தில் இருக்கும் ஒருவர் ஏகத்துவத்தின் பக்கம் இணைய வரக் கூடிய கட்டத்திலும் இது போன்று ஷைத்தான் அவரிடம் விஷ வித்துக்களை விதைக்கின்றான். அதனால் அவர் சத்தியத்திற்கு வராமலேயே இருந்து விடுகின்றார்.

இன்று சமுதாயத்தில் பல செல்வந்தர்கள், ''நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான். உங்கள் பள்ளிக்குத் தொழ வந்தால் எங்களுக்கும் நஜாத் என்ற முத்திரை குத்தி விடுகின்றார்கள். இது தான் நாங்கள் பகிரங்கமாக வர முடியாததற்குக் காரணம்'' என்று கூறுகின்றார்கள்.

04 March 2011

TNTJ வின் தேர்தல் நிலைபாடு: சென்னையில் கூடும் அவரச மாநில செயற்குழு


முஸ்லிம்களின் ஓட்டை தீர்மானிக்கும் TNTJ - வின் அவரச மாநில செயற்குழு சென்னை டி - நகர் இன்ஷா அல்லாஹ் வரும் 06-03-2011 அன்று கூடுகின்றது.

இடம் – வேங்கடேஸ்வரா விவாஹ மஹால். பாண்டி பசார் காவல் நிலையம் பின்புறம். டி நகர் சென்னை.

நேரம் – காலை 10 மணி

நாள் - 06-03-2011

- Thanks to www.tntj.net

முஸ்லீம் பெயர்தாங்கி அரசியல் கட்சிகள் !!!

கண்ணியமிக்க வல்லோன் தன் திருமறையில் கூறுகிறான்: அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுப் படுத்துகிறாய்.நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 3:26)

ஒருவருக்கு ஆட்சியை வழங்குவதும், அதைப் பறித்துக் கொள்வதும் நம்மை படைத்த அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.நாம் வாழும் இந்திய திருநாட்டிலே யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை  நாமே தீர்மானித்து, தெர்ந்தெடுக்கக் கூடிய வசதியை வல்ல இறைவன் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் நமக்கு வழங்கியுள்ளான். அதனடிப்படையில் இந்திய முஸ்லிம்களாகிய  நாம் நம்முடைய ஓட்டை ஆண்டாண்டு காலமாக சில குறிப்பிட்ட கட்சிகளுக்கே ஓட்டளித்து அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து அழகுப் பார்த்தோம். 

நமது தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த சட்டசபைத் தேர்தல் இன்ஷாஅல்லாஹ் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெறம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சி அல்லது தான் சார்ந்த கூட்டணிக்குத் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என விரும்புவார்கள். மேலும், மற்ற சமுதாயத்தைப் பொருத்தவரையில் எல்லாக் கட்சிகளிலும் பரவலாக இருக்கின்றனர். 

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இதுநாள் வரையில் குறிப்பிட்ட சில கட்சிகளுக்குத்தான் ஆதரவு என்ற நிலைபாட்டில் உள்ளனர். யாரை முஸ்லீம் சமுதாயம் ஆதரிக்குமோ அவர்கள் தான் அதிகமான இடங்களை பெற்றுனர் என்பதால் அனைவரின் பார்வையும் முஸ்லீம் சமுதாயத்தின் மீது தான் உள்ளது.

02 March 2011

கப்ருஸ்தானை அழிக்கும் காசு ஆசை


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) தங்கத்தால் ஆன ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடை இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனது வாயை (கப்ரில் போடப்படும்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும் (இந்தப் பேராசையிலிருந்து) திருந்தி மன்னிப்பு கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அறிவிப்பவர்: அனஸ் பின்  மாலிக்(ரலி) நூல்: புகாரி 6439

பணத்தின் மீது கொண்ட பேராசைக்கு மண் தான் இறுதி எல்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் மனிதனின் இந்தக் காசாசை அந்த மண்ணையும், அதாவது கப்ரு ஸ்தானையும் அழிக்கும் அளவுக்கு வந்து விட்டது.

வருவாய் பெருக்குகின்றோம் என்ற பெயரில் ஜமாஅத் நிர்வாகத்தினர் பொது மையவாடிகளை அழித்து வணிக மைய வாடிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் பள்ளிவாசல்களில் கப்ருஸ்தான்களை அழித்து, கடைகள் மற்றும் வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடும் போக்கு அதிகரித்து வருகின்றது.

சுனாமி வந்த பிறகும் இந்த ஜமாஅத்தார்கள் சுதாரித்துப் பாடம் பெறவில்லை. பொதுவாகவே பூகம்பம், புயல், வெள்ளம், சுனாமி, கொள்ளை நோய் போன்ற இயற்கைப் பேரழிவுகளாலும், போர்கள் போன்ற செயற்கைப் பேரழிவுகளாலும் மனித வாழ்வு முற்றுகையிடப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சோதனையான கால கட்டங்களில் இறந்த மனித உடல்களை மொத்தம் மொத்தமாக அடக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வராது என்று யாராலும் சொல்ல முடியாது.

''ஆண்டியும் இங்கே அரசனும் இங்கே'' எனும் அளவுக்கு சமரசம் உலாவும் பொது கப்ருஸ்தான்களில் பெரும் புள்ளிகளின் கப்ருகள் மட்டும் கற்கள் பதிக்கப்பட்டு கட்டப் பட்டுள்ளன.

இது போக அவ்லியாக்கள், ஷைகுகள், மகான்கள் என்ற பெயரில் அவர்களது கப்ருகள் பொது மைய வாடியிலேயே தர்ஹாக்களாக ஆக்கப் பட்டுள்ளன. இந்த அத்துமீறிய ஆக்கிரமிப்பால் ஏற்கனவே பொது மையவாடிகள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஜமாஅத்தார்கள் வருவாய் என்ற பெயரில் மைய வாடிகளை, வணிக மைய வாடிகளாக மாற்றி வருவது நம்மில் இறப்பவர்களுக்கு இருக்கின்ற ஒரே உரிமையைப் பறிக்கும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

இருப்பவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிக்கும் அநியாயச் செயலைக் கண்டு மக்கள் நொந்து கொண்டிருக்கும் வேளையில் இறந்தவர்களின் ஆறடி நிலத்தையும் ஆக்கிரமித்து, அபகரித்துக் காசு தேடுவது கடைந்தெடுத்த கயமைத் தனமும் காசு வெறியுமாகும்.

இப்போதுள்ள சட்டப்படி ஊருக்குள் எங்கேயும் மையவாடி அமைக்க முடியாது. ஊருக்கு வெளியே தான் மையவாடி அமைக்க முடியும். இத்தகைய இடங்களில் இனி கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு நிலத்தின் விலை வானத்தின் எல்லை தொட்டு நிற்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சமுதாயப் பொது மக்கள் இனி இதைக் கண்டு பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

அதிலும் குறிப்பாக இயற்கைச் சீற்றங்கள் போன்ற சோதனைக் காலங்களில் மொத்தப் புதையலுக்கு இது பெருத்த ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்த அபாயத்தை ஒரு போதும் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

ஊருக்கு மத்தியில் மையவாடி அமைந்திருப்பது உண்மையில் ஒரு பாக்கியமே! இந்தப் பாக்கியத்தை பொருளாதாரப் பேராசைக்குப் ப­யாக்கவும் நம்முடைய கடைசி இடமான கப்ருஸ்தானைக் காசாக்கும் கயமைத்தனத்திற்கும் ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம் என்று சபதம் ஏற்போமாக!இந்தச் சவாலை சட்ட ரீதியாக சந்திப்போமாக!

பொறுத்தது போதும்! பொங்கி எழுங்கள். உங்கள் புதை குழிகளைக் காப்பதற்குப் போர்க் குரல் கொடுங்கள்.

01 March 2011

இந்த வார உணர்வில்.. (மார்ச் 13)


ஹோர் அல் அன்ஸ் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டலம் கிளையான ஹோர் அல் அன்ஸ் கிளையில் கடந்த 25.02.2011 அன்று போஸ்ட் ஆபீஸ் பள்ளியில் மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்றது.

இதில் சகோ.முஹம்மது இஸ்மாயில் கலந்து கொண்டு 'நபி வழியே! நமது வழி!! என்கிற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த மார்க்க சொற்பொழிவில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

துபை மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் கருனையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டல தலைமை மர்கஸில் வாராந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் மார்க்க சொற்பொழிவு கூட்டம் நடைப்பெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் கடந்த 25.02.2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோ.முஹைதீன் அவர்கள் 'மரணமும், மண்ணறை வாழ்க்கையும்' என்ற தலைப்பில் அனைவரும் சிந்திக்க கூடிய வகையில் சிறப்பான முறையில் உரை நிகழ்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!